இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து
சமீபத்தில் வெளியான ‘இறைவி’ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
பீட்ஷா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இறைவி’. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், இறைவி படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment