ஒத்த காலில் நின்று மீண்டும் அனுஷ்காவுடன் சேர்ந்துவிட்ட கோஹ்லி

Share this :
No comments

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கோஹ்லியை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா மறுத்ததால் அவர்களின் காதல் முறிந்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டதாக பேசப்படுகிறது.

சுல்தான் சுல்தான் படப்பிடிப்புக்காக புடபெஸ்ட் சென்ற அனுஷ்காவை முத்தம் கொடுத்து மும்பை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் கோஹ்லி. அப்பொழுதே பாலிவுட்காரர்கள் ஒரு விஷயத்தை கன்பர்ம் செய்துவிட்டனர்.

டெல்லி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அனுஷ்கா டெல்லிக்கு சென்று கோஹ்லியின் தாயை சந்தித்து பேசினார். அதன் பிறகு கோஹ்லி அனுஷ்காவின் படபிடிப்பு தளத்திற்கு வந்து 2 மணிநேரம் இருந்துவிட்டு சென்றார்.

கோஹ்லி கோஹ்லி ஜிம்பாப்வேக்கு செல்லாததால் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் அவர் அனுஷ்காவுடன் நேரம் செலவிட அவருடன் எங்கோ விமானத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.

சேர்ந்துட்டாங்கய்யா சேர்ந்துட்டாங்க கோஹ்லியும், அனுஷ்கா நிச்சயமாக மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என ரசிகர்கள் சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் காதலை புதுப்பித்த செய்தி ஊர், உலகிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது. 

இந்நிலையில் இந்த விஷயத்தை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.(அப்படியா?)

முயற்சி அனுஷ்காவுடன் மீண்டும் சேர கோஹ்லி பெருமுயற்சி செய்தார். அனுஷ்காவின் சகோதரர் மூலம் தூது விட்டார். ஒரு வகையாக அனுஷ்காவுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார்.


No comments :

Post a Comment