ஒரே நேரத்தில் இரண்டு கணவர்களை ஏமாற்றிய பிரபல நடிகை

Share this :
No comments


ஒரே நேரத்தில் தனது இரண்டு கணவர்களை சின்னத்திரை நடிகை சுபஸ்ரீ ஏமாற்றியதாக அவர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

சன் டிவியில் ஏற்கனவே, ஒளிபரப்பான சொந்தம் பந்தம் சீரியலிலும், தற்போது, கல்யாண பரிசு சீரியலிலும் நடித்து வருபவர் சுபஸ்ரீ (33). சென்னையில் வசிக்கும் நடிகை சுபஸ்ரீக்கும், மன்னார்குடியைச் சேர்ந்த சரணவனுக்கும் 2007 ஆம் ஆண்டு மே, 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் நடிகை சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்தார். ஆனால், எனது சொத்தை அபகரிக்கும் நோக்கில் சுபஸ்ரீ செயல்பட்டார் என சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நடிகை சுபஸ்ரீ, சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த பொறியாளர் சீனிவாசன் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சுபஸ்ரீ நேரில் ஆஜராக வேண்டும்' என பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நேற்று விசாரணைத்து வந்த போது, எழும்பூர், 13ஆவது குற்றவியல் நீதிமன்றமன்றத்தில் நடிகை சுபஸ்ரீ சரணடைந்தார்.

இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பமாக நடிகை சுபஸ்ரீயின் இரண்டாவது கணவரும் தன்னையும் நடிகை ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments :

Post a Comment