தடையுடன் தொடங்கிய குற்றால சீசன்

Share this :
No comments


தென் மேற்கு பருவ மலை தொடங்கியதை அடுத்து குற்றாலத்திலும் சீசன் தொடங்கியுள்ளது. அருவியில் அதிக நீர்வரத்து காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழை சற்று காலதாமதாகவே தொடங்கியது. இதனால் அருவியில் தண்ணீர் இல்லாமல் விடுமுறை காலத்தில் குற்றாலத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பினர். தற்போது தொடங்கிய கனமழையால் குற்றால அருவியில் நீர் சீறி பாய்கிறது.

அருவியில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சீசன் தொடங்கிய நாளிலே குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

No comments :

Post a Comment