அறிமுக இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் சுந்தர் சி, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ், சிங்கம் புலி, சதீஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் முத்தின கத்திரிக்கா. மலையாளத்தில் வெளிவந்த வெளிமூங்க என்ற படத்தின் ரீமேக்கான இந்த படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்திருகிறார் இயக்குனர்.

சுந்தர் சி-யின் தந்தையும், தாத்தாவும் அரசியலில் பிரபலமாக வேண்டும் என முயன்று, அது முடியாமல் போனது. அதனால் சுந்தர் சி-யை அரசியல் வாடை படாமல் வளர்க்கிறார் அவரது அம்மா. ஒரு நாள் வேஷ்டி சட்டை அணிந்து ஊரில் நடந்து வரும் போது அவருக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து சுந்தர் சி-க்கு அரசியல் ஆர்வம் வருகிறது.

இதனால் அரசியலில் சாதிக்க வேண்டும் என ஒரு கட்சியில் சேர்கிறார் சுந்தர் சி. இவருக்கு அரசியல் எதிரியாக இருப்பவர்கள் அண்ணன் தம்பியான சிங்கம் புலி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர். சிங்கம் புலி, விடிவி கணேஷ் இருவரும் சகோதரர்களாக இருந்தாலும் எதிரெதிர் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் நல்ல விஷயங்களை மக்களிடையே விளம்பரம் செய்ய முயற்சிக்கும் போது இடையில் சுந்தர் சி புகுந்து அந்த புகழை தட்டி செல்கிறார்.

இப்படி இருக்கும் போது ஒரு நாள் நாயகி பூனம் பாஜ்வா மீது முதல் பார்வையிலையே காதல் வசப்படுகிறார் 40 வயதான சுந்தர் சி. பூனம் பாஜ்வாவை திருமணம் செய்ய பொண்ணு கேட்டு அவர் வீட்டுக்கு செல்லும் போதுதான் படத்தில் முக்கியமான டுவிஸ்ட் வைக்கிறார் இயக்குனர்.

பொண்ணு கேட்க போகும் இடத்தில் பூனம் பாஜ்வாவின் அப்பாவாக வருபவர் சுந்தர் சி உடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர். தன்னுடன் படித்தவனே தன் பொண்ணை கேட்டு வந்ததால் ஆத்திரப்படும் பூனம் பாஜ்வாவின் அப்பா, நீ அரசியலில் பெரிய ஆளாக வா, அப்புறம் என் பொண்ண உனக்கு கட்டி தாரேன் என அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

இதனையடுத்து வரும் தேர்தலில் சிங்கம் புலி, விடிவி கணேஷ் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கும் சுந்தர் சி தேர்தலில் வெற்றி பெற்றாரா, பூனம் பாஜ்வாவை திருமணம் செய்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

காமெடி கலந்த அரசியல் கதையை தந்திருக்கும் அறிமுக இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது. சும்மாவே காமெடி படம் எடுக்கும் சுந்தர் சி இந்த காமெடி படத்தில் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். சேலையில் வரும் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் போதுமான அளவு தந்திருக்கிறார்.

முக்கியமாக சுந்தர் சி உடன் இருக்கும் சதீஷ் வயதை வைத்து சுந்தர் சி-ஐ கலாய்க்கும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. சிங்கம் புலி, விடிவி கணேஷ் காமெடி கலந்த வில்லனாக வருவது படத்திற்கு கூடுதல் பலம். சித்தார்த் விபினின் இசை சொல்லும்படியாக இல்லை என்றாலும், குறை சொல்ல முடியாத அளவுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பானு முருகன் காட்சிகளை கலர்புல்லாக தந்திருக்கிறார். முதல் படத்திலேயே நல்ல காமெடி படம் தந்திருக்கும் இயக்குனர் வெங்கெட் ராகவனிடம் வரும் காலங்களில் மேலும் நல்ல காமெடி படங்களை எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் முத்தின கத்திரிக்கா “முத்தான கத்திரிக்கா”

ரேட்டிங்: 3/5

முத்தின கத்திரிக்கா - திரை விமர்சனம்



எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் - அஞ்சலியின் காதல் கெமிஸ்ட்ரியை யாராலும் மறக்க முடியாது.
இருவரும் உண்மையாகவே காதலிக்கின்றனர் என்று வதந்தி கிளம்பும் அளவுக்கு நிஜ காதலர்களைப் போலவே நடித்திருந்தனர். இந்த ஜோடி பேய் படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகிறது.

அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த பேய் படத்தில் ஜெய்யுடன், அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரமும் உள்ளது. அஞ்சலி ஐடி துறையில் வேலை பார்ப்பவராக வருகிறார்.

படத்தின் ஹைலைட் ஜெய், அஞ்சலி உள்பட படத்தில் வரும் அனைவருமே கோஸ்ட்கள். அதாவது பேய்கள். ஜுலை 6 -ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஜெய், அஞ்சலியின் பேய் கூட்டணி



அமெரிக்காவின் ஆர்லாண்டோ கிளப்பில் 50 பேரை சுட்டுக்கொன்றவுடன் உமரின் செல்போனுக்கு, அவரது மனைவி ஐ லவ் யூ என எஸ்.எம்.எஸ் அனுப்பிய விவகாரம் தற்போது வெளியே தெரிந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நுழைந்த உமர் மாட்டின் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு பக்கம் உமரை பற்றி பல விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

உமர் அந்த தாக்குதலை நடத்தப்போவது அவருக்கு மனைவிக்கு தெரிந்தும் அவர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது, உமர் அந்த கிளப்புக்கு சென்று 50 பேரை சுட்டுக் கொன்றதை, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு அவரது மனைவி உமருக்கு போன் செய்துள்ளார்.

ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, தனது மனைவிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதில் “டிவி பார்த்துவிட்டு எனக்கு போன் செய்கிறாயா?” என்று கேட்டுள்ளர். அதற்கு பதில் அனுப்பியுள்ள அவரின் மனைவி “ ஐ லவ் யூ” என்று கூறியுள்ளார்.

எனவே, உமரின் மனைவிக்கு தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே அவர் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார்.

50 பேரை சுட்டுக் கொன்ற உமருக்கு ஐ லவ் யூ சொன்ன மனைவி : பகீர் தகவல்



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன் உண்மையான குற்றவாளி இல்லை எனவும், ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என விசாரணை அதிகாரியாக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் கூறியுள்ளார்.

சிபிஐ ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருடை பதிவில், விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடிய காலை 04:10 மணிக்கு 3 ஆய்வாளர்கள் 7 ரவுண்ட் சுட்டோம். நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர். மற்றவர்கள் பயன் படுத்தியது 9 எம்எம் பிஸ்டல்.

நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே! குண்டு சாந்தன் இருதயத்தை துளைத்தது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரியவந்தவுடன் என் நண்பர்கள் என்னை தூக்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள். லேசாக மழை பெய்துகொண்டு இருந்தது. இந்த காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கின்றன. இது கதை வசனம் இல்லை. ஒரு தேச பக்தன் தன் தேசத்தின் மானம் காக்க துணிச்சலாக கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு.

இவ்வாறு சிபிஐ ஆய்வாளராக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த சாந்தன் அப்பாவி என கூறப்படுகிறது, வெளிநாட்டுக்கு வேல்லைக்கு செல்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் சின்ன சாந்தன். கஸ்டம்ஸ் பட்டியலில் சாந்தன் பெயர் இருந்தது. இதை வைத்து குற்றவாளியாக சேர்த்துவிட்டார்கள்.

பிறகு, உண்மையான குற்றவாளி குண்டு சாந்தன் சிக்கிய தகவலை ரகோத்தமனுக்கு சொல்கிறார் மோகன்ராஜ். அவரோ, இது வெளிய தெரிஞ்சா சிபிஐக்கு பெரிய அவமானமாகப் போய்விடும். சுட்டுக் கொன்றுவிடுங்கள் என உத்தரவிட்டதாக திருச்சி வேலுச்சாமியிடம் பேசியிருக்கிறார் மோகன்ராஜ்.

இது தொடர்பாக பேசிய மோகன்ராஜ் நான் தான் சாந்தனை சுட்டுக்கொன்றேன் என்பதை ஒப்புக்கொள்கிறார். இதனால் மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்து போய் உள்ளனர். எந்த தவறும் செய்யாமல் 25 ஆண்டுகளாக சாந்தன் ஏன் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதற்கு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ள மோகன்ராஜ், இந்த செய்தியை பார்த்து விட்டு மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் பதறி போய் இருக்கிறார்களாம். பதறுவதோடு நிறுத்தி கொள்ளாமல் உடனே புகார் செய்யுங்கள். போலீஸ் விசாரிக்கட்டும் என கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தன் ஒரிஜினல் சாந்தன் இல்லை: அம்பலமான உண்மை



நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும்.

இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கள் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போது இரண்டு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பெரிதாகவும், மணி பர்ஸுக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை அமெரிக்காவில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

செல்போனை சார்ஜ் செய்ய இனி மணிபர்ஸ் போதும்



தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணியில் இருக்கும் நடிகை நயன்தாரா பற்றிய கிசுகிசுக்களுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் நயன்தாரா காதல் விவகாரங்கள் மிகவும் பிரபலமானவை.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த பெருமை கொண்ட நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கை என்பது கொஞ்சம் கசப்பானவை தான்.

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்த போது முதன்முதலாக நடிகர் சிம்புவுடன் காதல் வசப்பட்டார். ஆனால் இந்த காதல் திருமணத்திற்கு முன்னரே சில மாதங்களில் பிரிந்தது.

பின்னர் வில்லு படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் பிரபு தேவா உடன் காதல் வசப்பட்டார். இதன் பின்னர் பிரபு தேவா அவரது மனைவியை விவாகரத்து செய்தார். நடிகை நயன்தாராவும் மதம் மாறி பிரபு தேவாவை திருமணம் செய்ய தயாராக இருந்தார். ஆனால் இந்த காதலும் கடைசி நேரத்தில் திருமணத்துக்கு முன் பிரிந்தது.

அதன் பிறகு கொஞ்ச காலம் காதலில் விழாமல் இருந்த நயன்தாரா நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இந்த காதல் தொடர்பாக விக்னேஷ் சிவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அதை மறுக்கவில்லை. இதனையடுத்து இருவரும் காதலிப்பது உறுதியானது. இந்த காதல் ஜோடி குறித்து அவ்வப்போது பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுடனான காதலும் தற்போது முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டதாக வரும் தகவல் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன காரணத்திற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பது தெரியவில்லை.

காதலில் கபடியாடும் நயன்தாரா: விக்னேஷ் சிவனுக்கும் அல்வா!



அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாள்ர் ஹிலாரி கிளிண்டனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் டெனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இதில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இது பெருமை மிகுந்த தருணம் என்றும், அதிபர் தேர்தலில் போடிட்யிடுவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையும், குரலையும் அளித்துள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்து



சென்னையிலிருந்து துபாய் சென்ற விமானம், கபாலி திரைப்படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடலால தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த 14ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 07.00 மணிக்கு, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா இந்தியாவின் AI 0905 என்ற விமானம் துபாய் புறப்பட்டு சென்றுள்ளது.

விமான நேர அட்டவணைப்படி விமானம் இரவு 10.00 மணிக்கு துபாய் மணிக்கு சென்றடைய வேண்டும். ஆனால், துபாய் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.

காரணம் குறித்து விளக்கம் அளித்த விசாரணை அதிகாரி, “விமானத்தில் நெருப்புக்கான சமிக்ஞையோ, புகையோ வெளியாகவில்லை. பயணிகளில் ஒருவர் ‘நெருப்பு, நெருப்பு’ என தமிழில் கத்தியதால், அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண் விமான நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் சிரித்துக்கொண்டு கூறுகையில், ”சென்னையை சேர்ந்த 30 வயதுடைய என்ஜினியர் ஒருவர், கபாலி திரைபடத்தில் வரும் ’நெருப்புடா’ பாடலை பாடியுள்ளார். அவர் காதில் ஹெட்போனை அணிந்துகொண்டு அவரது உச்சக்குரலில் பாடியுள்ளார்.

ஒருசில தமிழ் வார்த்தைகள் மட்டுமே தெரிந்த அந்த பணிப்பென், குறிப்பாக அவசர காலத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தெரிந்து வைத்துள்ள அந்த பெண் ‘நெருப்பு’ என்ற வார்த்தையை கேட்டதும் விமான ஓட்டுநருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்தே விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

ஆகாயத்தை அதிர வைத்த ‘நெருப்புடா’ பாடல் : தரையிறங்கிய துபாய் விமானம்



முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அதிரடி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்காக தமிழக அரசு வழங்கிய வாகனத்தை திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், அதிமுக 134 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுக 89 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவியாகும்.

எனவே, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகளைகலும் வழங்கப்படும்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பில் இன்னோவா கார் வழங்கப்பட்டது. ஆனால், அந்த காரை மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர், தனது சொந்த காரை பயன் படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.

சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை ஒதுக்காமல் அரசு புறக்கணிப்பு செய்த காரணத்தினால் தான் மு.க.ஸ்டாலின் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

கிளம்பிட்டாருய்யா....... அண்ணன் கிளம்பிட்டாருய்யா.... என திமுகவில் குரல் ஒழித்த வண்ணம் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்




தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அரசியல் வாழ்வில் இது ஒரு கடினமான காலம் எனலாம். கட்சி ஆரம்பித்தலில் இருந்து சேர்த்து வந்த செல்வாக்கு வாக்கு வங்கி என எல்லாத்தையும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தொலைத்துவிட்டு விழி பிதிங்கி நிற்கிறார்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என எந்த பக்கம் போவது என தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது அவரது தற்போதையை நிலமை. தேர்தல் தோல்வியால் விரக்தியில் சோர்வில் இருக்கும் தொண்டர்களை வலுபெற செய்ய வேண்டும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை அடுத்த கட்சிக்கு ஓட விடாமல் தக்க வைக்க வேண்டும்.

இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்க முயல வேண்டும். இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் வேறு வருகிறது. தேர்தலை சந்தித்து தங்கள் பலத்தை நிரூபிக்க வேணடிய கட்டாயம். கட்சி அங்கீகாரம், சின்னம் போன்றவற்றை திரும்ப பெற வேண்டும். இப்படியாக பல இக்காட்டான சூழலில் உள்ளார் விஜயகாந்த்.

இந்நிலையில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தோல்வியுற்ற வேட்பாளர்கள், அடிமட்ட நிர்வாகிகள் என அனைவருடனும் ஆலோசனை நடத்தி வரும் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திக்கலாமா இல்லை கூட்டணியுடன் சேர்ந்து சந்திக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி கூட்டணி வைத்தால் மக்கள் நல கூட்டணி சேர்ந்தால் சேதாரமாகி இருக்கும் கட்சி இன்னும் சேதாரமாகி விடும் என கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில் பாஜக பக்கம் சாய்ந்தால் நாம் கரை சேர முடியுமா என விஜயகாந்த் நினைப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விஜயகாந்தை பற்றி அக்கறையாக கேட்டதாகவும், அந்த செய்தி விஜயகாந்த் காதுக்கு போனதாகவும், இதனால் விஜயகாந்த் பாஜகவிடம் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என யோசிப்பதாக பேசப்படுகிறது.

ஆளும் கட்சி போட்டிருக்கும் அவதூறு வழக்குகளை சந்திக்க பாஜக உறுதுணையாக இருக்கும் எனவும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் பாஜக உதவும் எனவும் விஜயகாந்த் நினைப்பதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

குழப்பத்தில் விஜயகாந்த்: பாஜக உடன் சேர்ந்து கரை சேர திட்டம்



முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அதிரடி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்பயிற்சி மையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்டீரிசியன், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் 30 ஆயிரம் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளது. 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு உச்ச வயது 40 ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் அனைத்து தொழிற்பயிற்சி மையங்களிலும் ம் சேர்ந்து தொழிற்பயிற்சி பெறலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய வாய்ப்பு - இலவசமாக தொழிற்பயிற்சி பெறலாம்




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

EMI Thavanai Murai Vazhkai Sun Tv Serial 17-06-16 Episode 74






Aadhira Sun Tv Serial 17-06-16 Episode 308








 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 17-06-16 Raj Tv Serial Episode 86



Veerappan's Encounter: Vijay Kumar IPS exclusive interview







Ayutha Ezhuthu 17-06-2016

Ayutha Ezhuthu 17-06-2016










Moondru Mudichu 17-06-16 Polimer Tv Serial Episode 115


(17/06/2016) Ayutha Ezhuthu Neetchi | Movie Piracy Issue : Who is at Fault..? | Thanthi TV



Pattiyal Sekar Controvesial Speech About Tamil Serials



Vijay Movie Release Date Is Diwali To Audience Raajkapoor Speech



Kajal Make Better Cofee Than Karthi Funny Moments







Polimer Tv Serial Inai Kodugal 17-06-16







 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 16-06-16 Raj Tv Serial Episode 85







Urave Uyire 17-06-16 Polimer Tv Serial Episode 294






 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kanchana 17-06-16 Raj Tv Serial Episodse 234



What happened to Rajini? - Real news



'I want Neruppu Da kind of Songs" - Vijay Wish to Santhosh Naryanan



G.V. Prakash proved he is a Vijay Fan in "EIPI" - Vijay Fans Happy





Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 17-06-2016 Episode 409



Muthina Kathirikka Movie Video Review



Enakku Innoru Per Irukku Movie Public Opinion







PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Poovizhi Vasalile 17-06-16 Raj Tv Serial Episode 275



விஜய் ஸ்டைலின் ரகசியம் இவரா



ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி புதிய தகவல்